free website hit counter

Sidebar

17
தி, மார்
24 New Articles

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே ரவி சாஸ்திரி கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் ரவி சாஸ்திரியும், இந்திய அணியின் ஏனைய பயிற்றுவிப்பாளர்களான பாரத் அரூண் (பந்துவீச்சு பயிற்சியாளர்), R. சிறிதர் (களத்தடுப்பு பயிற்சியாளர்) மற்றும் நிதின் படேல் (உடற்பயிற்சியாளர்) ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வைத்திய அதிகாரிகளின் மேலதிக அறிவுறுத்தல்கள் வரும் வரையில் ரவி சாஸ்திரி மற்றும் இந்திய அணியின் பயிற்றுவிப்பாள்ர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் தொடர்ந்தும் வைக்கப்பட்டிருப்பர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதேநேரம், தலைமை பயிற்றுவிப்பாளர் இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula