free website hit counter

குருனால் பாண்டியாவுக்கு கொரொனா தொற்று

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பிக்க இருந்த இரண்டாவது டி20 போட்டி குருனால் பாண்டியாவிற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதனால் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இன்று ஏனைய வீரர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதணை செய்யப்பட்டு அதன் முடிவுகளின் படியே நாளை போட்டி நடப்பது உறுதி செய்யப்படும். குருனால் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தமது விடுதியிலுள்ள அறைகளில் தனிமைப்படுத்த அறிவுருத்தல் செய்யப்பட்டுள்ளது.

இன்று இரவு மற்றைய வீரர்களின் பீ.சி.ஆர் முடிவுகள் கிடைக்கப்பட்ட பின்னர் அனைத்து வீரர்களுக்கும் தொற்று இல்லை என முடிவு வந்தால் நாளை அதாவது புதன் கிழமை இரவு இரண்டாவது டி20 போட்டி ஆரம்பமாகும்.

குருனால் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்புடைய 8 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் எத்தனை நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் ஒருவருக்கும் கொரொனா தொற்றில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் நாளை காலை இலங்கை அணி வீரர்கள் அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதணை செய்யப்படும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction