free website hit counter

நெதர்லாந்து அணி சாம்பியன் - புரோ ஆக்கி லீக்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நெதர்லாந்து 36 புள்ளிகளுடன் சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் தொடரில், இந்திய அணி ரோட்டர்டாமில் நேற்று நடந்த தனது கடைசி லீக்கில் நெதர்லாந்தை எதிர்கொண்டது.

இதில் கடுமையாக போராடிய இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அந்த அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலும் இந்தியா தோற்று இருந்தது. இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் நெதர்லாந்து 36 புள்ளிகளுடன் சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.

இந்தியா 30 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பெற்றது. இதன் பெண்கள் பிரிவில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வியை தழுவியது. அர்ஜென்டினா 42 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction