free website hit counter

எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை - மவுனம் கலைத்தார் விராட் கோலி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வதந்திகள் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக விளக்கமளித்து ஓய்ந்து விட்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் அதிரடியாக நீக்கியது.அவருக்கு மாற்றாக ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்து பிசிசிஐ உத்தரவிட்டது. தென் ஆப்பிரிக்க  கிரிக்கெட் தொடர்  முதல் ரோகித் சர்மா இந்திய அணியின் முழு நேர ஒருநாள் மற்றும் 20 வது ஓவர்  கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவர் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த விவகாரம் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் எதிரொலித்தது. இந்திய அணி வரும் டிசம்பர் 26ம் திகதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்காக அனைத்து வீரர்களும் மும்பை வந்து சேர்ந்த நிலையில் விராட் கோலி நேற்று முன்தினம் வரை மும்பையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்காமல் இருந்தார் . இதனால்  அவர் ஒருநாள் போட்டி தொடரிலும் பங்கேற்க போவதில்லை எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக  விராட் கோலி முதல் முறையாக இன்று மவுனம் கலைத்துள்ளார். இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "நான் நிச்சயம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுவேன், எப்போதும் இந்திய அணிக்காக நான் இருப்பேன் . கேப்டன்சி பொறுப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது .அந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானது, இந்த சர்ச்சைகள் குறித்து அந்த சர்ச்சையை எழுப்பியவர்கள் தான்  தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.கடந்த இரண்டு ஆண்டுகளாக இது பற்றி விளக்கம் அளித்து ஓய்ந்து விட்டேன்.டெஸ்ட் அணி தேர்வு செய்த போது, என்னிடம் ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டது. நான் அப்போதே சம்மதம் என்று கூறிவிட்டேன். அதன்பிறகும் கூட பிசிசிஐ அதிகாரிகள் உடன் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளேன். எனவே அந்த விவகாரம் அப்போதே முடிந்தது."
என்று கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction