free website hit counter

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்தவுள்ள சூர்யகுமார் யாதவ்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடருக்கான அணியின் கேப்டனாக அனுபவம் வாய்ந்த டி20 வீரரை நியமித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 ஐ ஹோம் தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை அணியில் தாமதமாக நுழைந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ICC ஆடவர் உலகக் கோப்பை 2023-ன் பெரும்பாலான உறுப்பினர்கள் கடுமையான போட்டிக்கு பின் இம்முறை ஓய்வெடுக்கவுள்ளனர். சூர்யகுமார், பிரசித் மற்றும் இஷான் கிஷான் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே வரவிருக்கும் டி20 தொடரில் விளையாடுவார்கள்.

மறுபுறம், சமீபத்திய காலங்களில் இந்தியாவை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா, காயத்திற்குப் பிறகு இன்னும் குணமடையும் நிலையில் இருக்கும் காரணத்தினால் அணியில் இடம் பெறவில்லை. புனேவில் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் லீக் நிலை ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை மோதலின் போது இவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

சூர்யகுமார் T20I வடிவத்தில் 46.02 சராசரி மற்றும் 172.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 1841 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் டி20யில் மூன்று சதங்கள் அடித்துள்ளார்.

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்.

இந்தத் தொடர் நவம்பர் 23 முதல் டிசம்பர் 3 வரை நடைபெறவுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction