சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பில் கூறியுள்ள பொய்யான கூற்று பாராளுமன்றத்தை சீரழித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கல்வித் தகுதிகளை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் பதவி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - AKD
மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் சீர்குலைக்க இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (13) அரச ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அரசு மற்றும் எதிர்க்கட்சி MPக்களுக்கு SLPP அழைப்பு
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகைமை தொடர்பில் அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகளை அடுத்து, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க எம்.பி.க்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அழைத்துள்ளது.
“அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகைமைகள் மற்றும் அவர் அவற்றை நிவர்த்தி செய்யத் தவறியமை தொடர்பாக அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகள் ஆழ்ந்த கவலைக்குரியவை. சபாநாயகராக, அவர் முக்கிய அரசாங்க நியமனங்களுக்கு பொறுப்பான அரசியலமைப்பு சபைக்கு தலைமை தாங்குகிறார். இத்தகைய கறைபடிந்த பதிவைக் கொண்ட ஒரு சபாநாயகர் பாராளுமன்றத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார். அசோக சபுமல் ரன்வல மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க உறுப்பினர்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைக்கின்றோம்." என்று கட்சி 'X' இல் இடுகையிட்டது.
SJB தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவித்துள்ளது
சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்றத்தில் எஞ்சியுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனங்களை நிரப்புவதற்கு பரிந்துரைக்கப்பட்ட நான்கு பெயர்களை இறுதியாக அறிவித்துள்ளது.
மாத்தளையில் குரங்குகளுக்கு கருத்தடை சிகிச்சை ஆரம்பம்
பயிர் அழிவை நிவர்த்தி செய்யும் முயற்சியாக குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடி வேலைத்திட்டம் மாத்தளையில் இன்று ஆரம்பமாகிறது.
பயிர் சேதத்திற்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு முடிவு
அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக பயிர்கள் அழிவடைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 100,000 ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பரவும் காய்ச்சல் எலிக்காய்ச்சல் என அடையாளம் காணப்பட்டுள்ளது
யாழ்ப்பாணத்தில் பரவி ஏழு உயிர்களை பலிகொண்ட காய்ச்சலானது எலிக்காய்ச்சல் என பொதுவாக அழைக்கப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு இன்று அறிவித்துள்ளது.