free website hit counter

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரசாங்கத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. அவர் தோற்றுப் போய்விட்டார். அதனாலேயே, பஷில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருகிறார்கள்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர். 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு ராஜபக்ஷக்கள் யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

“அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்தது. எனினும், அதனைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. 

எமது கடல் வளத்தை வெளிநாட்டினர் சுரண்டும் நிலை உருவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

மற்ற கட்டுரைகள் …