free website hit counter

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் பணிக்கு வருவார்கள் - UGC தலைவர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள நிலுவையை வழங்குவதற்காக திறைசேரி 4.2 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ருகுணு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய UGC தலைவர், 75 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடமைக்கு சமூகமளிப்பார்கள் என உறுதியளித்தார்.

மேலும் பேசிய யுஜிசி தலைவர் கூறியதாவது: 75 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்கள் வரும் திங்கட்கிழமை முதல் பணிக்கு திரும்புவார்கள். அவர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு ஜனாதிபதி தலையிட்டு தீர்வை பெற்றுக் கொடுத்தார். அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

“வேலைநிறுத்தங்கள் இல்லாத நிலைக்கு நம் நாட்டைக் கொண்டு சென்றால் அதுவே நாட்டின் வளர்ச்சியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula