free website hit counter

Sidebar

12
வி, ஜூன்
22 New Articles

மூன்றாவது மீளாய்வுக்காக IMF குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழு, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள், நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான முந்தைய ஒப்பந்தங்களின் அமுலாக்கம் போன்றவற்றை மதிப்பீடு செய்யும்.

இந்த மீளாய்வுக்கு பின், இலங்கைக்கான அடுத்த தவணை கடனை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula