மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களுக்கு மத்தியிலும், இலங்கையின் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி தொடரும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் ச. நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறை ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், உலகளாவிய சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக எரிபொருள் விலையில் சிறிதளவு உயர்வு ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்டார்.
மேலும், அத்தகைய விலை உயர்வின் பெரும்பகுதி செலவை திறைசேரியா ஏற்கும் என்பதால், அது நுகர்வோர் மீது முழுமையாகக் சுமத்தப்படாது என்றும் அவர் விளக்கினார்.
தற்போது நிலவும் போர்க்காலச் சூழல் சீரடைந்தவுடன், தற்போதுள்ள உயர்ந்த எரிபொருள் விலைகளை கூடிய விரைவில் குறைப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ச. ஜெயதிஸ்ஸ வலியுறுத்தினார்.