free website hit counter

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (செவ்வாய் கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 20 ஆம் தேதி வேட்பு மனுவுக்கான பரிசீலனை நடைபெறும். தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அதற்கு முன்பாக புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வது அவசியமாகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction