free website hit counter

மணிஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மார்ச் 4 வரை விசாரணைக்காவல் வழங்கி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை பல மணி நேர விசாரணைக்குப் பின் சி.பி.ஐ. அதிரடியாகக் கைது செய்தது. புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்த நிலையில் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில் மணிஷ் சிசோடியாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி சிபிஐ அனுமதி கோரியது.

மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

மணிஷ் சிசோடியாவை மார்ச் 4-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction