free website hit counter

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.31 லட்சம் கோடியாக உயர்வு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-2022 நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதியை 400 பில்லியன் டாலராக (ரூ.30 லட்சம் கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. நிதி ஆண்டு முடிவடைவதற்கு 9 நாட்கள் இருக்கும்போதே கடந்த மாதம் 23-ந் திகதி இந்த இலக்கு எட்டப்பட்டது. 

கடந்த நிதி ஆண்டு முடிந்தநிலையில், ஏற்றுமதி 418 பில்லியன் டாலராக (ரூ.31 லட்சத்து 35 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள், என்ஜினீயரிங் பொருட்கள், நகை மற்றும் ரத்தினங்கள், ரசாயனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகமாக இருந்ததே இதற்கு காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction