free website hit counter

இந்தியாவில் 12ஆம் வகுப்பு நுழைவுத்தேர்வுகள் நடாத்துவது குறித்து அரசு கூட்டம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிபிஎஸ் எனும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் இந்தியாவில் கொரோனா பரவலை அடுத்து ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் மாநில தேர்வு வாரியங்களின் தலைவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் உயர் மட்ட கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தெரிகிறது. இதில் தேர்வுகளுக்கான திகதிகள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார். அத்தோடு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பெரும்பாலான மாநில வாரியங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை தொடர்ந்து ஒத்திவைத்திருந்தது குறிப்பிடதக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction