free website hit counter

தமிழகத்தில் தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு..? - முதல்வர் ஆலோசனை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய ஊரடங்கு உத்தரவு நாளை 31ந் திகதியுடன் முடிவுற உள்ள நிலையில், அதை மேலும் நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்.

இக் கூட்டத்தில் தமிழகத்தில் தணிந்திருந்த கொரோனா வைரஸ் தொற்று, தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவது தொடர்பாகவும், அதற்கான காரணங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் நடக்கும் இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தைத்தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் பற்றிய அறிவிப்பினை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction