free website hit counter

புதுச்சேரியில் குழந்தைகளுக்குப் பரவிய கொரோனா !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவின் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதினால், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதில் 12 குழந்தைகள் 1 முதல் 5 வயதுக்குட்பட்டவர்களெனவும், மற்றைய நான்கு குழந்தைகள் 5வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா குழந்தைகள் நல பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்ள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா இளையவர்கள் மற்றும் குழந்தைகளைப் பெரிதும் தாக்காது எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இச் கோதனை முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction