free website hit counter

சிறையில் இருந்த ஆர்யன் கான் விடுவிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இன்று மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்ற ஜாமீன் உத்தரவை அடுத்து இன்று அதிகாலை முதலே மும்பை ஆர்த்தர் ரோடு சிறைச்சாலை அதிகாரிகள் ஆர்யன் கானை ஜாமினில் விடுவித்ததோடு சிறையில் இருந்த மகன் ஆர்யன் கானை அழைத்துச் செல்ல நடிகர் ஷாருக்கான் நேரில் சென்றிருந்தார்.

கப்பல் விருந்து நிகழ்வில் ஆர்யன் கான் விருந்தினராக அழைக்கப்பட்டதும் அவர் போதை மருந்து உட்கொண்டதாக மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தவில்லை எனவும் வாதத்தையுன் அவை தொடர்பான ஆவணங்களையும் ஆர்யன் கான் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது, இதனையடுத்து மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி விடுவித்ததுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction