free website hit counter

வெளியேறிய நச்சுப்புகையின் காரணமாக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசடைந்துள்ளது.

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காற்று மாசடைவதை தடுக்கும் வகையில், தீபாவளி திருநாளில் பல்வேறு வேதிப்பொருட்கள் அல்லாத பசுமை பட்டாசுகளை

வெடிக்க வேண்டும் என்றும், அதனையும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தீபாவளி தினத்தன்று காற்றில் பறக்கவிடப்பட்டதாகவே தெரிகிறது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று வழக்கத்துக்கு மாறாக காற்றின் தரம் 20 மடங்கு அளவுக்கு மாசடைந்துள்ளதே இதற்கு சான்று.

பாட்டாசு நச்சு புகையால் சென்னையின் பல இடங்களில் காற்றின் தரம் மிக ஆபாயகரமான அளவுகளுக்கு சென்றுள்ளது. Air Quality Index -AQI 50 இருந்தால் நல்ல காற்று,100 வரை இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் சென்னையின் பல்வேறு இடங்களில் AQI அபாயகரமான அளவான 500+ தாண்டியுள்ளது.

இது இயல்பை விட 20 மடங்கு அதிகம். அடுத்த சில நாட்களில் மருத்துவமனைக்கு நுரையீரல் நோயால் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை நினைத்தாலே அச்சமாகவுள்ளது.

இந்த அளவுள்ள காற்றுமாசுள்ள பகுதியில் வாழ்பவர்கள் 45 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை சுவாசித்திருப்பார்களோ்அவ்வளவு நச்சை சுவாசித்துள்ளார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction