free website hit counter

ஐயோ சாமி..! : இலங்கையிலிருந்து பிரபலமாகும் மற்றுமொரு பாடல்

பாடல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையிலிருந்து உலகம் முழுவதும் 'மெனிகே மஹே கீதே' எனும் பாடல் பிரபலமானதை அடுத்து தற்போது " ஐயோ சாமி நீ எனக்கு வேணா.." என தொடங்கும் சோகப்பாடல் ஒன்று பிரபலமாகிவருகிறது.

எதார்த்தமான வலிகள் நிறைந்த வரிகளாலும் மென்மையான இசையாலும் இந்தப்பாடல் பலரது கவனத்தை பெற்றுவருகிறது.

இலங்கையின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சனுக விக்கிரமசிங் இந்த ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துள்ளதோடு இலங்கையின் பிரபல பாடகி வின்டி குணதிலக்க பாடலை பாடியுள்ளார்.

இலங்கையைச்சேர்ந்த கவிஞர் அஸ்மின் என்பவர் இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் நான் திரைப்படத்தில் வரும் "தப்பேல்லாம் தப்பே இல்லை" எனும் பாடலை எழுதி அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் என்பது குறிப்பிடதக்கது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction