free website hit counter

விளையாட்டு நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் நேரடியாகத் தெரிவிக்குமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று (29) பின்னர் தீவின் காலநிலையில் அதன் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான மீள் திட்டமிடப்பட்ட கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை 2024 நவம்பர் 28 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே 110 கி.மீ தொலைவில் நிலைகொண்டது. இது மெதுவாக, வடக்கு-வடமேற்கு நோக்கி இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரக்கூடும்.

இன்று காலை 10.00 மணி நிலவரப்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை இலங்கையில் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும், ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …