free website hit counter

அம்பாந்தோட்டை லங்கா சால்ட் கம்பனியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.நந்தன திலக்க, உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் பீதியடைந்து உப்பை வாங்கி பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இலங்கை பொலிஸார் விசேட போக்குவரத்து நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

சமகி ஜன பலவேகய (SJB) கூட்டணி தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதன் சின்னத்தில் போட்டியிடும் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

இந்திய முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

நேற்று தனது 92வது வயதில் காலமான இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கையின் மூத்த அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மாதாந்தம் 150,000 ரூபாவிற்கும் குறைவான வைப்புத்தொகை வட்டியை ஈட்டும் அதேவேளையில் 10 வீத வரியை செலுத்த வேண்டிய வைப்புதாரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கி வருவதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்திற்குள் ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு நிச்சயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …