free website hit counter

வடக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய முகம்; கீதாநாத் காசிலிங்கம் போட்டியிடுகிறார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் பீரோ உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.  

 

 காசிலிங்கம் இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக கடமையாற்றினார். 

 

 காசிலிங்கம் ஏற்கனவே வடக்கில் உள்ள தமிழ் சமூகத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் குறிப்பாக மாவட்டங்களில் உள்ள இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உறுதியளித்துள்ளார். வடக்கில் நீண்டகாலமாக நிலவும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, விவசாய ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் வடக்கை ஒரு சர்வதேச வர்த்தக மையமாக மாற்றுவது, உள்ளூர் சமூகத்திற்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது ஆகியவை அவர் கவனம் செலுத்தும் வேறு சில பகுதிகள். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula