free website hit counter

ஜனாதிபதி தேர்தலுக்காக நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் விசா, கடவுச்சீட்டு நெருக்கடி காரணமாக சிரமங்களை எதிர்கொள்கின்றனர்: NPP

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இலங்கைக்கு வரவிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டில் தற்போது நிலவும் விசா மற்றும் கடவுச்சீட்டு நெருக்கடி காரணமாக சிரமங்களை எதிர்நோக்குவதாக NPP பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் தேர்தலுக்காக நாட்டிற்கு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும், கடவுச்சீட்டு காலாவதியானவர்கள் கடவுச்சீட்டை புதுப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அரசாங்கம் வேண்டுமென்றே பிரச்சினைகளை மோசமடைய அனுமதித்துள்ளதா என சந்தேகிக்கப்படுவதாக எம்.பி தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula