சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்கள் துப்புரவு செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து, புடவைகளையும் வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்கள்.
21 மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 மாநகராட்சிகளில் தி.மு.க. மற்றும் ஒரு மாநகராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தில், காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணையை திங்கள்கிழமை முதல் நிறுத்த உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.