free website hit counter

சுவிற்சர்லாந்தும் ரஷ்யாவின் கறுப்பட்டியலில் - சுவிஸ் பல்பொருள் அங்காடிகள் ரஷ்யப் பொருட்களை தவிர்க்கின்றன !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தின் பதின்மூன்றாம் நாள் இன்று. போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம், பொது மக்களை வெளியேற்றும் இடைக்காலப் போர்நிறுத்தங்கள் மறுபுறம், பாரிய குண்டுவீச்சுக்கள் இன்னொரு புறமுமாக இந்த யுத்தம் நீடித்துச் செல்கிறது.

யுத்த பிரதேசத்தில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் நேற்றைய முயற்சிகளும் எதிர்பார்த்த வெற்றியைத் தராதநிலையில், இன்று காலை போர் நிறுத்தத்திற்கான புதிய முயற்சி திட்டமிடப்பட்டுள்ளது. கீவ், மரியுபோல், சுமி, செர்ன்ஹிவ் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிப்பதே இதன் நோக்கமாகும்.

இதன்படி சுவிஸ் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு போர்களில் புதிய உள்ளூர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த முறை செயல்பாடுகள் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நேற்று ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகளுக்கு இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை பெலாரஸில் பெலோவெஜ்ஸ்காயா புஷ்சா காட்டில் முடிவடைந்தாலும், மோதல் நிற்கவில்லை.பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்புகளின் நான்காவது அமர்வு பரிசீலிக்கப்படுகிறது. இதேவேளை உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ இடையேயான சந்திப்பு வியாழன் 10 அன்று துருக்கியின் அன்டலியாவில் திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோலில், மார்ச் 2 முதல் 200,000 குடியிருப்பாளர்கள், நீர் மற்றும் மின்சாரம் கிடைக்காமல், குளிரில் உறைந்துள்ளனர். மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனம், மார்ச் 6 அன்று, ரஷ்ய பீரங்கி தாக்குதலில் ஒரு மொபைல் தொலைபேசி ரிப்பீட்டரை தாக்கப்பட்டதால் நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைப்பது நடைமுறையில் சாத்தியமற்றுள்ளது எனத் தெரிவிக்கிறது.

இது இவ்வாறிருக்க ரஷ்யாவின் ‘எதிரி நாடுகள்’ பட்டியலில் சுவிட்சர்லாந்தும் சேர்க்கப்பட்டுள்ளது.பொருளாதாரத் தடை முயற்சிகளுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவு தெரிவித்ததினால், ரஷ்யா, சுவிட்சர்லாந்தை 'எதிரி நாடுகளின்' பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த நடவடிக்கை திங்களன்று அறிவிக்கப்பட்டது. பட்டியலில் இடம் பெற்றவர்கள் ரஷயாவிற்கு எதிராக "நட்பற்ற செயல்களை" செய்ததாக ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். பட்டியலில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்டவை அடங்கும்.

இது இவ்வாறிருக்க, பல சுவிட்சர்லாந்தின் சில்லறை விற்பனையாளர்கள் ரஷ்ய பொருட்களைப் புறக்கணிப்பதாக அறிவித்த பிறகு, சுவிட்சர்லாந்தில் உள்ள அங்காடிகள், அதன் அலமாரிகளில் இருந்து ரஷயப் பொருட்களை அகற்றியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஆத்திரமூட்டப்படும் ரஷ்யா ஐரோப்பாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் நடவடிக்கை எடுப்பின் ஐரோப்பா பெரும் துன்பத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு. ரஷ்யாவிலிருந்து எரிசக்தி இறக்குமதி ஐரோப்பாவின் விநியோகத்திற்கு "அத்தியாவசியமானது". என்று ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி விநியோகங்களை தடைகளில் இருந்து ஐரோப்பா தெரிந்தே விலக்கியுள்ளது. வெப்பம், இயக்கம், மின்சாரம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றிற்கான ஆற்றல் ஆதாரங்களுடன் நமது நகரங்கள் மற்றும் நமது குடிமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்தது" என்று அவர் கூறியுள்ள அவர், "ரஷ்ய ஆற்றலுக்கான மாற்றுகளை உருவாக்க ஜேர்மன் அரசாங்கம் மற்ற ஐரோப்பிய ஒன்றிய பங்காளிகளுடன் இணைந்து பெரும் அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறது," என்று கூறியுள்ளார். ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நிறுத்தி வைத்திருக்கும் அனுமின்நிலையங்களை மீண்டும் இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும், மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு சுவிட்சர்லாந்து முழுவதும் தேவாலய மணிகள் ஒலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சுவிட்சர்லாந்தின் மூன்று முக்கிய தேவாலயங்களால் கூட்டாக தொடங்கப்பட்டது. சுவிஸ் ஆயர்கள் மாநாடு, சுவிசேஷ சீர்திருத்த தேவாலயம் மற்றும் கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபை ஆகியன கூட்டாக இதனை அறிவித்துள்ளன.

"உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரையும், ஐரோப்பாவில் அமைதிக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது" என்று மூன்று மதக் குழுக்களும் ஒரு அறிக்கையை வெளியிட்டன. "உடனடியாக போர் நடவடிக்கைகளை நிறுத்தவும் மேலும் துன்பத்தைத் தடுக்கவும் ரஷ்ய ஜனாதிபதியை வேண்டுகின்றோம். உக்ரைனில் உள்ள அனைவருடனும், அவர்களின் பயம் மற்றும் அக்கறையுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுவிற்சர்லாந்துக்கு வரும் உக்ரேனிய அகதிகளைத் தங்கவைப்பதற்காக, கூட்டாட்சி புகலிட மையங்களில் தற்போது 5,000 இலவச இடங்கள் உள்ளன. 847 அகதிகள் ஏற்கனவே அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிரவும் 11,000க்கும் மேற்பட்ட தனியார்கள் அகதிகளை அவர்களது வீடுகளில் தங்க வைக்க முன்வந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் உக்ரேனியர்களின் எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் தெரியவரும். அவர்கள் சாதாரண புகலிட நடைமுறைக்கு செல்லாமல் வசிப்பிட உரிமையைப் பெற தகுதியுடையவர்கள் என்று அரசாங்கம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. "சுவிஸ் அகதிகள் உதவி அமைப்பு இந்த சலுகைகளை ஒருங்கிணைத்து உக்ரைனியர்களை தனியார் ஹோஸ்ட்களுடன் அல்லது மாநில கட்டமைப்புகளின் நெருக்கமான ஒத்துழைப்பில் வைக்கும்" என்று இடம்பெயர்வுக்கான மாநில செயலகம் (SEM) ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: