free website hit counter

இத்தாலி தடுப்பூசி திட்டத்தில் மூன்றாவது டோஸ் வழங்கல் ஆரம்பம் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இத்தாலியின் தடுப்பூசி திட்டத்தின் மூன்றாவது டோஸ் வழங்கும் ஆரம்பநாளில், நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ள 6,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு, வழங்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் பாதிக்கப்படக்கூடிய மூன்று மில்லியன் மக்களை இலக்காகக் கொண்டு இத்தாலிய அரசாங்கம், நேற்று திங்கட் கிழமை, மூன்றாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகளை போடத் தொடங்கியது.

அரசியல் அரங்கிலிருந்து விடைபெறும் ஓர் ஆளுமை !

மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் மூன்றாவது டோஸ் தடுப்பூசிகளின் ஆரம்ப அலையைத் தொடர்ந்து, அறிவியல் தொழில்நுட்பக் குழு (CTS) பச்சை விளக்கு கொடுக்கும்போது, இத்தாலி சுகாதாரப் பணியாளர்களையும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களையும் கூடுதல் டோஸ் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

"தடுப்பூசி பற்றி எச்சரிக்கையாக இருப்பவர்களுக்கு சொல்கிறேன். யாரும் உங்களை கட்டாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் மருத்துவமனைகளில் கோவிட் பாதிக்கப்படுவதைப் பார்க்கவும் தகவல்களைப் பெறவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியவும் வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களை நாம் பாதுகாக்க வேண்டும், நாங்கள் சுயநலமாக இருக்க முடியாது," என்று இத்தாலியின் அவசரநிலைக்கான அசாதாரண ஆணையர் ஜெனரல் ஃபிரான்செஸ்கோ பாலோ ஃபிகிலியூலோ, செய்தியாளர்களிடம் கூறினார்.

நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்களுக்கு, மூன்றாவது தடுப்பூசி, இரண்டாவது டோஸுக்கு 28 நாட்களுக்குப் பிறகு வழங்கப்படலாம் .மேலும் சுகாதார அமைச்சின் சமீபத்திய வழிகாட்டுதலின் படி, அந்தப் பிரிவினருக்கு விரைவில் கொடுக்கப்பட வேண்டும். மற்ற அனைத்து பிரிவுகளுக்கும், இரண்டாவது தடுப்பூசிக்குப் பின் குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: