free website hit counter

மத்திய வங்கி மார்ச் மாதத்தில் அதிக அளவு டாலர்களை வாங்கியது. நாட்டில் மிக மோசமான நாணய நெருக்கடியில் இரு ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு தற்போது அதன் வெளிநாட்டு நாணய பணப்புழக்கத்தில் மிகவும் வசதியான நிலையில் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார், அங்கு உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை அவர் அங்குரார்ப்பணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயதுடைய பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை முடிந்து மக்கள் கொழும்பு திரும்புவதற்காக திங்கட்கிழமை (ஏப்ரல் 15) மற்றும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

வாக்கு அரசியலை முதன்மைத் தெரிவாகக் கொண்டவர்களில் அநேகர், அடுத்தவர் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் உத்தியை அரசியல் செல்நெறியாகக் கொண்டவர்கள். அவர்களினால் சமூகத்துக்கு எந்த நன்மையும் எந்தக் காலத்திலும் ஏற்படுவதில்லை. மாறாக, அவர்கள் தங்களின் சுயநலனுக்கான ஓட்டத்தில் குறியாக இருப்பார்கள். அதற்காக யாரையும் எந்த நேரத்திலும் முதுகில் குத்துவதற்கும் தயங்க மாட்டார்கள். அப்படியானவர்கள், அர்ப்பணிப்போடு எழுந்த தமிழ்த் தேசிய அரசியலையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதுதான், பெரும் சாபக்கேடு. 

பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலுக்குப் பிறகு திடீர் கொள்கை மாற்றங்களால் இலங்கையின் மீட்சி ஸ்தம்பிதமடைந்துவிடும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி வெள்ளிக்கிழமை எச்சரித்தது.

இலங்கை முழுவதிலும் உள்ள 336 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பராமரிப்பில் உள்ள சிறுவர்களுக்கான வருடாந்த பரிசுப் பொதிகள் விநியோகம் இன்று (ஏப்ரல் 13) நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: