free website hit counter

ஹரீனும் மனுஷாவும் எம்பி பதவியை இழந்தனர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான சமகி ஜன பலவேகய (SJB) தீர்மானம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் இன்று இரண்டு முக்கிய தீர்ப்புகளில் தீர்மானித்துள்ளது.
இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் வெளியேற்றம் அவர்களின் பாராளுமன்ற ஆசனங்களையும் அமைச்சுப் பதவிகளையும் இழக்க வழிவகுக்கும்.

நீதிபதிகள் விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுதாரர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு SJB எடுத்த தீர்மானம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று கூறியது.

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் SJB தம்மை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியதை எதிர்த்து இரண்டு தனித்தனியான வெளியேற்ற மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மனுஷ நாணயக்காரவுக்காக பைஸர் முஸ்தபா பிசியும், ஹரின் பெர்னாந்துக்காக ரொமேஷ் டி சில்வாவும், விரான் கொரியா பிசியுடன் எம்.ஏ.சுமந்திரனும், எஸ்.ஜே.பி தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்காக கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் சம்பத் விஜேவர்தன ஆகியோர் ஆஜராகினர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula