free website hit counter

சுவிற்சர்லாந்து பெப்ரவரி இறுதிக்குள் கோவிட் கட்டுப்பாடுகளை முற்றாக நீக்கும் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்து அரசு பல கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்துவதாகவும், பெப்ரவரி இறுதிக்குள் அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிடுவதற்கான இரண்டு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் நோய்த்தொற்று விகிதம் முன்னெப்போதையும் விட அதிகமாக இருந்தபோதிலும், நாட்டின் மருத்துவமனைகள் மற்றும் ICU களின் தேவை நிலையானதாக உள்ளன. தொற்றுநோய் தொடங்கி சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தடுப்பூசியின் ஒருங்கிணைந்த தாக்கம் மற்றும் ஓமிக்ரான் மாறுபாட்டின் குறைந்த வீரியம் ஆகியவற்றினால் விளைந்த சில நல்ல தருணமாக உணர்ந்து கொண்டு, அரசாங்கம் கோவிட் நடவடிக்கைகளை மேலும் குறைக்கத் தயாராக உள்ளது.

நேற்று புதன்கிழமை பிற்பகல் சுவிஸ் அரசாங்கம் கோவிட் நடவடிக்கைகளை தளர்த்துவது மற்றும் மீதமுள்ள பெரும்பாலான நடவடிக்கைகளை மார்ச் மாதத் தொடக்கத்தில் முடிவுக்கு கொண்டுவரும் திட்டத்துடனான அறிவிப்பை வெளியிட்டது. இது தொடர்பிலலான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசின் தலைவர் இக்னாசியோ காசிஸ் பேசுகையில், "இன்று ஒரு அழகான நாள். அடிவானத்தில் ஒளியைக் காண்கிறோம். தொற்றுநோய் தொடர்பில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தை அரசு இன்று அறிவிக்கிறது" என்றார்.

இத்தாலியும் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது !

அரசு நேற்று அறிவித்த புதிய அறிவிப்பின்படி, வீட்டிலிருந்து வேலை செய்யும் கடமை மற்றும் ஐந்து நாள் தொடர்பு தனிமைப்படுத்தல் தேவை ஆகியவை புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையும்.

தொற்றுநோய் பாதுகாப்பு விதிகளிலிருந்து முற்றாக விலகிக் கொள்ளளும் சாத்தியமான இரு வழிமுறைகளை, சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் புதன்கிழமை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளார். இந்த ஆலோசனைகள் பிப்ரவரி 9ம் திகதி வரை ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வழிமுறை 1

பெப்ரவரி 17ந் திகதி முதல் புதிய நோய்த்தொற்றுகளின் அலையின் உச்சத்தை நாடு கடந்திருந்தால் அனைத்து கோவிட் நடவடிக்கைகளையும் நீக்கலாம். இது நடந்தால், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் நீக்கப்படும். பார்கள் மற்றும் உணவகங்கள், நிகழ்வுகள் மற்றும் கலாச்சார இடங்களுக்குச் செல்வதற்கு கோவிட் சான்றிதழ்கள் தேவையில்லை.

பார்கள், உணவகங்கள், பொது போக்குவரத்து, கடைகள் மற்றும் பொதுமக்கள் அணுகக்கூடிய பிற பகுதிகளில் இனி முகமூடிகள் தேவையில்லை.தனிப்பட்ட சந்திப்புகளுக்கு மேலும் கட்டுப்பாடுகள் இருக்காது, அதே சமயம் நிகழ்வுகள் இனி அங்கீகரிக்கப்பட வேண்டியதில்லை.

அனைத்து பெரிய நிகழ்வுகளுக்கும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் திட்டங்களுடன் நீங்கள் நேர்மறை சோதனை செய்தால் தனிமைப்படுத்த வேண்டிய தேவை உட்பட சில நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும்.

வழிமுறை 2

இது முதலாவது வழிமுறையயை விட மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. ஆயினும் பெப்ரவரி 17ந் திகதி முதல் பல நடவடிக்கைகள் தளர்த்தப்படும்.

உணவகங்களுக்கு இனி கோவிட் சான்றிதழ்கள் தேவையில்லை, இருப்பினும் இருக்கைகள் அளவு இன்னும் கட்டாயமாக இருக்கும். 2G விதி அதாவது மக்களுக்கு தடுப்பூசி அல்லது மீட்கப்பட வேண்டும் - 2G+ விதி இரவு விடுதிகள், பாடகர்கள், நீச்சல் குளங்கள் மற்றும் saunas மற்றும் உட்புற விளையாட்டு நடவடிக்கைகள் என்பவற்றுக்கு வேண்டும்.

தனிப்பட்ட கூட்டங்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் இருக்காது, அதே சமயம் பெரிய வெளிப்புற நிகழ்வுகள் அனுமதி மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டியதில்லை.

பாசிட்டிவ் சோதனை செய்பவர்களுக்கான தனிமைப்படுத்தல் விதி மற்றும் குறிப்பிட்ட இடங்களுக்கு 2G விதி ஆகியவற்றுடன் முகமூடி விதிகள் நடைமுறையில் இருக்கும். எதிர்காலத்தில் நிலைமை சுமுகமானவுடன், இவையும் அகற்றப்படும்.

பயண விதிகளிலும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன

சுவிஸ் அரசாங்கம் பயண விதிகளில் மேலும் மாற்றங்களை முன்மொழிந்துள்ளது, இது ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக மாநிலங்களால் முடிவு செய்யப்படும். நாட்டில் நடைமுறையில் உள்ள கோவிட் தொடர்பான அனைத்து நுழைவு விதிகளையும் நீக்குவது இதில் அடங்கும்.

தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது வைரஸிலிருந்து மீளாதவர்கள் வந்தவுடன் பரிசோதிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் கைவிடப்படும். சுவிட்சர்லாந்தின் நுழைவு படிவத்தில் தொடர்பு விவரங்களை வழங்க வேண்டிய தேவையும் கைவிடப்படும்.

சுவிட்சர்லாந்தில் இவை பயன்பாட்டில் இருக்காது என்பதால், சுற்றுலாப் பயணிகள் கோவிட் சான்றிதழ்களைப் பெற்றுக் காட்ட வேண்டியதில்லை. அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால், பெரிய நிகழ்வுகளுக்கு, சுற்றுலாப் பயணிகள் இந்த நிகழ்வுகளில் சான்றிதழ்களைக் காட்ட வேண்டும்.

இருப்பினும்,உள்நாட்டில் சான்றிதழ் தேவைப்படாவிட்டாலும், ஒட்டுமொத்த கோவிட் சான்றிதழ் ரத்து செய்யப்படாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இது வெளிநாட்டில் பயணம் அல்லது குறிப்பிட்ட இடங்களுக்கு நுழைவதற்கு காட்டப்பட வேண்டியிருக்கும்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: