ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது தொடர்பிலான உரையாடல்கள் மெல்ல வலுவிழக்கத் தொடங்கிவிட்டன. ஜனாதிபதித் தேர்தல் வரும் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையான காலப்பகுதிக்குள் ஒருநாள் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துவிட்டது. அதன்பிரகாரம் பார்த்தால், இன்னும் நான்கு மாதங்கள் மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கின்றன. அதற்குள் தகுதியான வேட்பாளர் ஒருவரை கண்டுபிடித்து தமிழ் மக்களிடம் அறிமுகப்படுத்தி வாக்குகளை கைப்பற்றும் ஆற்றல், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை தூக்கிச் சுமக்கும் தரப்பினரிடம் இருக்கின்றதா என்றால், அதற்கான சாத்தியங்கள் இல்லை.