free website hit counter

இந்த வருடம் G.C.E.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான G.C.E. உயர்தர வகுப்புகள் 2024 ஜூன் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் அமையவுள்ள சமகி ஜன பலவேகய (SJB) அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.

பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில நபர்கள் தவறான தகவல்களை பரப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்படுவதை முன்னறிவிக்கும் சில விவாதங்கள் சந்தை ஸ்திரமின்மையை பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

க.பொ.த (சா/த) விஞ்ஞான தாள் 1 இன் வினாக்கள் 09 மற்றும் 39 தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், இந்தக் கேள்விகளை முயற்சித்த அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இரண்டு இலவச புள்ளிகளை வழங்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

இலங்கையின் விவசாய ஏற்றுமதிகளை நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அடுத்த தசாப்தங்களில் நாட்டின் சனத்தொகை குறைந்தது ஒரு மில்லியனால் குறையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

தற்போது செயலிழந்துள்ள இலங்கைப் போராளிக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய அரசு செவ்வாய்க்கிழமை (மே 14) நீட்டித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் G.C.E.சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தவுடன் G.C.E. உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …