free website hit counter

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 2)

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எனது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், இந்தத் தொற்று பரவுவதைத் தடுக்கவும் என்னால் என்ன செய்ய முடியும்?

அனைவருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உலக சுகாதாரத் தாபனமான WHO இன் வலைத்தளத்திலும் உங்கள் தேசிய மற்றும் உள்ளூர் பொது சுகாதார ஆணையத்தின் மூலமாகவும் கிடைக்கும். கோவிட்-19 தொற்றுதல் பற்றிய சமீபத்திய தகவல்களை அவ்வப்போது இணையம் அல்லது ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளுங்கள். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் கோவிட்-19 தொற்றைத் தடுப்பதற்கான அரச, தனியார் நிறுவனங்கள் காணப்படுகின்றன. சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் உள்ள அதிகாரிகள் கோவிட்-19 தொற்றைக் குறைப்பதில் அல்லது நிறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும் உலக அளவில் நிலைமை மிகவும் திருத்தமாகக் கணிக்க முடியாதது. எனவே சமீபத்திய செய்திகளை தவறாமல் பாருங்கள்.

சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் கோவிட்-19 நோய்த்தொற்று அல்லது பரவுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.

1.உங்கள் கைகளை ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினி அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் முழுமையாக சுத்தம் செய்யுங்கள். இது உங்கள் கைகளில் இருக்கும் வைரஸ்களைக் கொல்லும்.

2. உங்களுக்கும் இருமல் அல்லது தும்மும் எவருக்கும் இடையில் குறைந்தது 1 மீட்டர் (3 அடி) தூரத்தை பராமரிக்கவும். யாராவது இருமல் அல்லது தும்மும்போது அவர்கள் மூக்கு அல்லது வாயிலிருந்து சிறிய திரவ துளிகளை தெளிக்கிறார்கள். அதில் வைரஸ் இருக்கலாம். நீங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தால், இருமல் உள்ளவருக்கு நோய் இருந்தால், நீங்கள் கோவிட்-19 வைரஸ் உள்ளிட்ட நீர்த்துளிகளை சுவாசிக்கலாம். இது உங்களுக்குத் தொற்றை ஏற்படுத்தும்.

3.கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும். கைகள் பல மேற்பரப்புகளைத் தொடுகின்றன. இதனால் வைரஸ்களை அதில் பற்றிக் கொள்ளலாம். அசுத்தமானதும், கைகள் உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாய்க்கு வைரஸை மாற்றும். அங்கிருந்து, வைரஸ் உங்கள் உடலில் நுழைந்து உங்களை நோய்வாய்ப்படுத்தும்.

4.நீங்களும் உங்களைச் சுற்றியுள்ளவர்களும் நல்ல சுவாச சுகாதாரத்தைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இருமல் அல்லது தும்மும்போது உங்கள் வளைந்த முழங்கை அல்லது திசுக்களால் உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடுவது இதில் ஒரு நடவடிக்கை ஆகும். பின்னர் பயன்படுத்தப்பட்ட திசுக்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள். நீர்த்துளிகளால் வைரஸ் பரவுகின்றது. நல்ல சுவாச சுகாதாரத்தைப் பின்பற்றுவதன் மூலம், உங்களைச் சுற்றியுள்ளவர்களை குளிர், காய்ச்சல் மற்றும் கோவிட்-19 போன்ற வைரஸ்களிலிருந்து பாதுகாக்கிறீர்கள்.

5.உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், மருத்துவ சிகிச்சை பெற முன்கூட்டியே அழைக்கவும். உங்கள் உள்ளூர் சுகாதார அதிகாரத்தின் வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் பகுதியில் உள்ள நிலைமை குறித்த புதுப்பித்த தகவல்களை தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வைத்திருப்பார்கள். முன்கூட்டியே அழைப்பது உங்கள் சுகாதார வழங்குனரை உங்களை சரியான சுகாதார வசதிக்கு விரைவாக வழிநடத்த அனுமதிக்கும். இது உங்களைப் பாதுகாப்பதுடன் பிற நோய்த்தொற்றுகள் தீவிரமாகமலும் தடுக்க உதவும்.

சமீபத்திய கோவிட்-19 தொற்று அதிகமுள்ள இடங்களில் எப்போதும் (கோவிட்-19 பரவலாக பரவி வரும் நகரங்கள் அல்லது உள்ளூர் பகுதிகள்) புதுப்பித்த நிலையில் இருங்கள். முடிந்தால் இந்த இடங்களுக்கு பயணிப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக நீங்கள் வயதானவராக இருந்தால் அல்லது நீரிழிவு, இதயம் அல்லது நுரையீரல் நோய் இருந்தால் நிச்சயம் தவிர்க்கவும்.
 

 

கோவிட்-19 பரவி வரும் (கடந்த 14 நாட்களில்) பகுதிகளில் உள்ள அல்லது சமீபத்தில் பார்வையிட்ட நபர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் :

தலைவலி, குறைந்த தர காய்ச்சல் (37.3 சி அல்லது அதற்கு மேல்) மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற லேசான அறிகுறிகளுடன் நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்க ஆரம்பித்தால் வீட்டில் தங்குவதன் மூலம் சுயமாக தனிமைப்படுத்துங்கள். யாராவது உங்களுக்கு பொருட்களை கொண்டு வருவது நலம். அல்லது வெளியே செல்வது உங்களுக்கு அவசியமானால், ( உதாரணம் : உணவு வாங்குதல்) பின்னர் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க முகமூடியை அணியுங்கள்.

மற்றவர்களுடனான தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் மருத்துவ வசதிகளுக்கான வருகைகள் இந்த வசதிகள் மிகவும் திறம்பட செயல்பட அனுமதிக்கும் மற்றும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் சாத்தியமான கோவிட்-19 மற்றும் பிற வைரஸ்களிலிருந்து பாதுகாக்க உதவும். நீங்கள் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். இது சுவாச நோய்த்தொற்று அல்லது பிற தீவிர நிலை காரணமாகவும் இருக்கலாம்.

முன்கூட்டியே அழைப்பது உங்களது சுகாதார உத்தியோகத்தரை உங்களுக்கு சரியான சுகாதார வசதிக்கு விரைவாக வழிநடத்த அனுமதிக்கும். இது கோவிட்-19 மற்றும் பிற வைரஸ்கள் பரவுவதைத் தடுக்கவும் இது உதவும்.

 

கோவிட்-19 எனக்குத் தொற்றிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் எந்தளவு அதிகம்?

ஆபத்து நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்தது. குறிப்பாக, அங்கு ஒரு கோவிட்-19 பரவுகை எந்தளவு தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது.

பெரும்பாலான இடங்களில் பெரும்பாலானவர்களுக்கு கோவிட்-19 தொற்றுவதற்கான ஆபத்து இன்னும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், இப்போது உலகம் முழுவதும் (நகரங்கள் அல்லது பகுதிகள்) நோய் பரவும் இடங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் அல்லது வருகை தரும் மக்களுக்கு கோவிட்-19 தொற்றும் ஆபத்து அதிகம். கோவிட்-19 இன் புதிய பரவும் வழக்கம் அடையாளம் காணப்படும் ஒவ்வொரு முறையும் அரசாங்கங்களும் சுகாதார அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயணம், இயக்கம் அல்லது பெரிய கூட்டங்களுக்கு செல்ல நேர்ந்தால் உள்ளூர் கட்டுப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நோய் கட்டுப்பாட்டு முயற்சிகளுடன் ஒத்துழைப்பது கோவிட்-19 தொற்றும் அல்லது பரவும் அபாயத்தைக் குறைக்கும்.

சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் எட்டப்பட்ட நிலவரப்படி கோவிட்-19 பரவுகை கட்டுப்படுத்தப் பட்டிருக்கலாம் அல்லது பரிமாற்றம் நிறுத்தப்பட்டிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, புதிய பரவுகைகள் விரைவாக வெளிப்படவும் செய்யும். நீங்கள் இருக்கும் சூழ்நிலையைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். உலகளவில் கோவிட்-19 நிலைமை குறித்த தினசரி புதுப்பிப்புகளை WHO வெளியிடுகிறது.

அதற்கான இணைப்பு இதோ : https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/situation-reports/


கோவிட்-19 பற்றி நான் கவலை கொள்ள வேண்டுமா?

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்படும் நோய் பொதுவாக லேசானது, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு. இருப்பினும், இது கடுமையான நோயை ஏற்படுத்தும். இது தொற்றும் ஒவ்வொரு 5 பேரில் 1 பேருக்கு மருத்துவமனை பராமரிப்பு தேவை. எனவே COVID-19 பரவுகை தங்களையும், தங்களின் அன்புக்குரியவர்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படுவது மிகவும் பொதுவானதே ஆகும்.

நம்மை, நம்முடைய அன்புக்குரியவர்கள் மற்றும் எங்கள் சமூகங்களைப் பாதுகாக்கும் செயல்களில் நம் கவலைகளைச் செலுத்தலாம். இந்த செயல்களில் முதன்மையானது வழக்கமான மற்றும் முழுமையான கை கழுவுதல் மற்றும் நல்ல சுவாச சுகாதாரம். இரண்டாவதாக, பயணம், இயக்கம் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றில் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது உட்பட உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்.

உங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி மேலும் அறிய இந்த இணைப்பு :

https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public


தொடரும்...

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction