free website hit counter

இலங்கைத் தமிழரசுக் கட்சியை மறுசீரமைப்புச் செய்யப் புறப்பட்டவர்கள் இன்றைக்கு நீதிமன்றங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலின் முதன்மைக் கட்சியொன்று தன்னுடைய பொறுப்பை மறந்து, தனியார்த்தனமும் சுயநல ஆட்டமும் ஆட முயன்றதன் விளைவை இப்போது சந்தித்து நிற்கின்றது.

தேசிய விடுதலையை வேண்டி நிற்கும் சனக்கூட்டத்தின் அரசியலை முன்னெடுக்கும் தரப்பினர், தங்களுக்குள் பதவிகளுக்காக முட்டி மோதும் போது, அந்தச் சனக்கூட்டத்தின் விடுதலை இலக்குகள் சிதைக்கப்படுகின்றன. அப்படியானதொரு நிலையை, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தாய்க்கட்சி என்று சொல்லக்கூடிய தமிழரசுக் கட்சி இப்போது நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. அந்தக் கட்சியிடம் எதிர்கால அரசியல் திட்டங்கள் ஏதும் இல்லை. வாக்கு அரசியலின் கட்சியாக தன்னைச் சுருக்கிக் கொள்ளும் செயற்பாடுகள் மட்டுமே காணப்படுகின்றன. 

2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் ஆய்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று அறிவித்துள்ளார்.

உலகில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்துள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம் நேற்று (25) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் பாதாள உலகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக இலங்கை காவல்துறை புதிய மோட்டார் சைக்கிள் படையணியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சாரத் துறைக்கான உத்தேச சீர்திருத்தங்களை உள்ளடக்கிய ‘இலங்கை மின்சார சட்டமூலம்’ வியாழக்கிழமை (25) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2023 (2024)க்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்குத் தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகள் மற்றும் பட்டறைகள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பரீட்சைகள் முடியும் வரை தடைசெய்யப்படும்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction