free website hit counter

2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் போது எந்தவித ஆதரவையும் மறுத்துள்ள இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் உபுல் தரங்கா, உலகக் கோப்பையில் எந்த அணிக்கும் சவால் விடக்கூடிய நல்ல நிலையில் இலங்கை அணி உள்ளது என்றார்.

நீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று ருமேனியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பெரும் தொகையை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் முயற்சியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு செயற்குழு ஏகமனதாக வாக்களித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து விலகிய 12,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர், மே 11 ஆம் திகதி வரை உள்ள காலப்பகுதியில் சட்டப்பூர்வ விடுதலையைப் பெற்றுள்ளனர்.

க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சையின் பொது ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் வெளியிடுவதில் ஈடுபட்ட டியூஷன் மாஸ்டர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது தொடர்பிலான உரையாடல்கள் மெல்ல வலுவிழக்கத் தொடங்கிவிட்டன. ஜனாதிபதித் தேர்தல் வரும் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையான காலப்பகுதிக்குள் ஒருநாள் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துவிட்டது. அதன்பிரகாரம் பார்த்தால், இன்னும் நான்கு மாதங்கள் மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கின்றன. அதற்குள் தகுதியான வேட்பாளர் ஒருவரை கண்டுபிடித்து தமிழ் மக்களிடம் அறிமுகப்படுத்தி வாக்குகளை கைப்பற்றும் ஆற்றல், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை தூக்கிச் சுமக்கும் தரப்பினரிடம் இருக்கின்றதா என்றால், அதற்கான சாத்தியங்கள் இல்லை.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction