சைவசித்தாந்த ஸந்தானாச்சார்யரில் ஒருவராகிய, தில்லை கொற்றவன்குடி ஸ்ரீ உமாபதிசிவாச்சார்யர் அவர்களின் (சித்திரை - அஸ்தம்) குருபூஜை இன்று.
மனங்களும் குணங்களும் வழிபாடுகளும் !
நம் மனதில் மூன்று குணங்கள் உள்ளன. அவைகள், தாமசகுணம், ராஜஸகுணம் மற்றும் சத்துவ_குணம் என்பதாகும்.
சிவராத்திரி இன்று மட்டுமா ?
அன்னை மகாசக்திக்கு ஒன்பது நாட்கள் நவராத்திரி என்றால் ஈசனுக்கு ஒருநாள் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். முழு முதற்கடவுளான சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி.
மார்கழித் திங்களும், திருவெம்பாவையும்.
மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையின் நாயகன் கிருஷ்ணன். பகவானே பிரியமுற்றுக் கூறுவதாக இருப்பதால் அது சிறப்பாகத் தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு வகையில் சிறப்பாகவே இருக்கிறது. அப்படியிருக்கும்போது மார்கழி மாதத்தினை தனது பிரியமான மாதமாக பகவான் சொல்வது ஏன் ?
நந்தி என்றால் ஆனந்தம்..!
எப்போதும் சிவ தியானத்திலிருக்கும் நந்திகேஸ்வரர் ஜீவாத்மாவின் அடையாளம். பரமாத்வை அடையும் நோக்கில் தியானித்திருக்கும் ஜீவாத்மாவிற்கு இடையுறு செய்யும் செயல்கள் எதுவாயினும் அது நன்மை பயக்காது என்பதனைச் சுட்டியே, அவ்வாறான நடைமுறைகளை ஆலயங்களில் தவிர்க்கக் கூறுகின்றார்கள்.
அகிலம் நிறை அகண்ட ஶ்ரீ ருத்ரபாராயணம் -2021
நான்கு வேதங்களில் ஒன்றான யசூர் வேதத்தின் தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். சமஸ்கிருத மொழியில் அமைந்த, ஸ்ரீருத்ரம் யசூர் வேத தைத்திரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நாலாவது காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளது. இதனுடைய இருதய ஸ்தானத்தில் இருப்பது சிவாயநம எனும் பஞ்சாட்சர மந்திரம்.
யாழ்ப்பாணக் கந்தபுராணக் கலாச்சாரம் நல்கிய பிள்ளையார் பெருங்கதை எனும் விநாயகர் சஷ்டி விரதம் !
முருகனுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம். ஐப்பசி மாதத்தில் வரும் , சுக்லபட்ச பிரதமை முதல் சஷ்டித் வரையிலான ஆறுதிதிகள் " ஸ்கந்த சஷ்டி" எனச் சிறப்புப் பெறுகிறது. இக்காலங்களில் 'ஸ்கந்த புராணம் ' பாராயணம் செய்யப்பெறும் பெருமையுளது.