மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் நிறைவு பெறும் இந் நோன்பு.
சனாதன தர்மம் எந்தவகையில் சிறந்தது ?
சனாதன தர்மம் எந்தவகையில் சிறந்தது? எனும் கேள்விக்கு எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் விரிவான பதிலே இப்பதிவாகும்.
வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் !
கற்பனைக் கதாபாத்திரமல்ல விவேகானந்தர். சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த மகான். கம்பீரமான தோற்றமும், கருணைபொழியும் கண்களும், ஆழமான ஆன்மீகமும் கொண்டு, இயல்பான வாழ்வியலோடான கருத்துக்களைத் தந்த தத்துவார்த்த வீரத்துறவி விவேகானந்தர்.
ஆடிமாதத்தில் அருள் தரும் நாயகி !
இன்று இவ்வருட ஆடிமாதத்தின் இறுதிச் செவ்வாய் மற்றும் ஆடி மாத பூரநட்சத்திர நன்நாளாகும். அகில லோகமாதவாக விளங்கும் அன்னை பராசக்தி இந்த ஆடிமாதத்தில் மானிடர்க்கு அருளை வாரிவழங்குவது பெரும் சிறப்பாகும்.
சிவ சிந்தை மிகு சண்டேஸ்வர நாயனார்
சிவ பெருமானை வணங்குபவர்கள் சண்டிகேஸ்வரரை வணங்காமல் இருக்க முடியாது. சிவபெருமான் பிரகாரத்தை சுற்றி வருகையில் அவருக்கு இடது புறம் அமர்ந்திருப்பவர்.நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சண்டிகேஸ்வரர் என்பதை விட, கைகளை தட்டி வணங்கும் தெய்வம் என்றால் எளிதில் நினைவு வரும்.
மதுரை ஆதீனம் 292 ஆவது மகாசந்நிதானத்தின் மறைவும் புதிய மகாசந்நிதானத்தின் பீடாரோஹணமும் !
1500 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தப்பெருமான் மதுரைக்கு எழுந்தருளிய போது அவர் எழுந்தருளிய மடமே அவரது பாரம்பரியமாக இன்றும் மதுரையாதீனமாக திகழ்கிறது. அவ்வகையில் சைவ ஆதீனங்களிடையே பழைமை மிக்க இந்த ஆதீனத்தில் இன்று வரை 291 குருமகாசந்நிதானங்கள் அருளாட்சி செய்துள்ளனர்.
வேல் வழிபாடு !
“சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து” என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்புற இணைத்துக் காணும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது.