counter create hit 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது - பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது இந்தியா

4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது - பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது இந்தியா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நிதானமாக ஆடிய விராட் கோலி 186 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 128 ரன்னும், அக்ஷர் படேல் 79 ரன்னும், கே.எஸ்.பரத் 44 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து 91 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்தது. இதையடுத்து 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியினர் தொடர்ந்து பேட்டிங் ஆடினர்.

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய குன்னெமன் 6 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் மார்னஸ் லபுஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். பொறுமையாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 90 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து லபுஸ்சாக்னேவுடன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த இணை மிகவும் பொறுமையாக ஆடினர். ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்தது. ஆட்டம் முடிய சுமார் 15 ஓவர்கள் மீதமிருந்த போது இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டனர். இதனால் ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதன்மூலம் இந்தியா தொடர்ந்து நான்கு முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 17ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula