சுவிற்சர்லாந்தில் கோவிட் பெருந்தொற்றின் அச்சம் பொது மக்கள் மத்தியில் குறைந்து வரும் நிலையில், நாளை ஆரம்பமாகும் பெப்ரவரி மாதத்தில் பல பதிவுத் திருமணங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகிறது.
சுவிற்சர்லாந்தில் கோவிட் அபாயம் இன்னமும் நீங்கவில்லை : சிடிஎஸ் தலைவர் ஏங்கல்பெர்கர்
"நாங்கள் இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை," என்று சுகாதார இயக்குநர்கள் மாநாட்டின் (சிடிஎஸ்) தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்கு முன் காத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜேர்மனியைக் கடுமையாகத் தாக்கும் ஒமிக்ரான் அலை !
ஜேர்மனியில் கோவிட் - 19 ஒமிக்ரான் அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிய வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 200,000 க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுகளை ஜேர்மன் பதிவு செய்திருக்கிறது.
டென்மார்க் பெப்ரவரி 1ல் கோவிட்-19 கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரலாம் !
டென்மார்க்கில் கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிப்பது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் தொற்றுநோய் ஆணையம், கட்டுப்பாடுகள் தொடர வேண்டுமா என்பது தொடர்பாக புதிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
சுவிற்சர்லாந்தில் தனிமைப்படுத்தல், வீட்டிலிருந்து வேலை, என்பன முடிவுக்கு வருகின்றன.
சுவிற்சர்லாந்தில் கோவிட் தனிமைப்படுத்தல் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வதை முடிவுக்கு வருகின்றன. பெப்ரவரி 2 ந்திகதிபுதன்கிழமையுடன் இவை முடிவுக்கு வருவதாக, நேற்று வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் அறிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான பயண விதிகள் பெப்ரவரி 1ல் எளிதாகின்றன !
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள், கோவிட் சான்றிதழ்களுடன் பயணிக்கும் வகையில் விதிகளை எளிதாக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
சுவிற்சர்லாந்தில் புதிய Omicron துணை மாறுபாடு !
சுவிற்சர்லாந்தில் நிச்சயமாக Omicron ன் புதியமாறுபாடான BA.2 உள்ளது. ஒமிக்ரானின் உண்மை வடிவமான BA.1ல் இருந்து திரிபு பெற்ற இந்தப் புதிய மாறுபாடு பல நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது.