உக்ரைன் மீதான ரஷ்யப்படையெடுப்பு ஆரம்பமாகி, மூன்று வாரங்களை நெருங்கவுள்ள நிலையில், சில தினங்கள் அமைதி காத்த ரஷ்யத் துருப்புக்கள் மீண்டும் கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளதாகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிற்சர்லாந்திற்கு உக்ரைன் அகதிகள் 60,000 பேர் வரலாம் !
சுவிற்சர்லாந்துக்கு உக்ரைனில் இருந்து 60,000 மக்கள் அகதிகளாக இடம்பெயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது ஒரு துல்லியமான மதிப்பீடாக இருக்காது என சுவிஸ் மத்திய அரசின் நீதித்துறை மற்றும் காவல்துறையின் தலைவர் கரின் கெல்லர்-சுட்டர் நேற்று உள்ளூர் செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் - துருக்கியில் பேச்சுவார்த்தை தோல்வி !
உக்ரைன் மோதலின் பதினைந்தாவது நாளில், ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் மற்றும் உக்ரேனிய டிமிட்ரோ குலேபா ஆகியோருக்கிடையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததும் எதிர்பார்ப்பு மிக்கதுமான பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று நடைபெற்றது.
சுவிற்சர்லாந்தும் ரஷ்யாவின் கறுப்பட்டியலில் - சுவிஸ் பல்பொருள் அங்காடிகள் ரஷ்யப் பொருட்களை தவிர்க்கின்றன !
உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தின் பதின்மூன்றாம் நாள் இன்று. போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம், பொது மக்களை வெளியேற்றும் இடைக்காலப் போர்நிறுத்தங்கள் மறுபுறம், பாரிய குண்டுவீச்சுக்கள் இன்னொரு புறமுமாக இந்த யுத்தம் நீடித்துச் செல்கிறது.
சுவிற்சர்லாந்தில் மீண்டும் கோவிட் புதிய தொற்றுக்கள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு !
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று புதன்கிழமை 33,754 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
சரணடைய விரும்பவில்லை பேச்சுவார்த்தைக்கு தயார் : உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் ரஷ்ய யுத்தம் பதின்நான்காம் நாளாகவும் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று செவ்வாய் கிழமை, உக்ரேனிய ஜனாதிபதி வ்லோடிமிர் ஜெலென்ஸ்கி, சரணடையும் விருப்பமில்லை. ஆனால் டான்பாஸ் மற்றும் கிரிமியாவின் எதிர்கால நிலை மற்றும் நேட்டோவில் தனது நாட்டின் உறுப்புரிமை குறித்து பேச்சுவார்த்தை மேற் கொள்ளலாம் என தொலைக்காட்சி உரையொன்றில் முதற்தடவையாக அறிவித்துள்ளார்.
உக்ரைனில் சுவிஸ் பத்திரிகையாளர் தாக்கப்பட்டார் - சீனா மத்தியஸ்தம் செய்ய தயார் !
உக்ரைனில் போர் உச்சம் பெற்றிருக்கும் நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான வழிமுறைகளும் திறக்கப்படுகின்றன. இதேவேளை இன்று உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது.