இத்தாலியில் நேற்று சனிக்கிழமை பாரிய அளவிலான எதிர்புப் போராட்டங்கள் வெடித்தன. தலைநகர் ரோமின் ரோமின் பியாற்ஸா டெல் போபோலோவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், பிரதமர் டிராகி, மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பிக் கூச்சலிட்டனர்.
இத்தாலியில் முசோலினியின் பேத்தி, தலைநகர் ரோம் உள்ளாட்சித் தேர்தலில் முன்னிலை !
இத்தாலியின் பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் பேத்தி ரேச்சல் முசோலினி, ரோம் நகர மன்றத் தேர்தலில் மிகவும் பிரபலமான வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.
இத்தாலி மிலானோ விமான விபத்தில் ருமேனிய கோடீஸ்வரர் மற்றும் 7 பேர் பலி !
இத்தாலியின் லினாத்தே விமான நிலையத்திலிருந்து, சார்த்தீனியாத் தீவு நோக்கி, கடந்த ஞாயிறு பிற்பகல் பறந்த சிறிய ரக தனியார் விமானம் ஒன்று, மிலானோவுக்குச் சமீபமாக, சென் டொனாடோ நகரில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
சுவிற்சர்லாந்தில் இன்று முதல் கோவிட் சோதனைகளுக்கு கட்டணமா ?
சுவிற்சர்லாந்தில் அக்டோபர் 1ந் திகதி முதல் இலவச கோவிட் பரிசோதனைகள் நிறுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. அரசியற்கட்சிகள் சில இந்த அறிவிப்புக்கு எதிர்வினையாற்றியிருந்தன.
சுவிற்சர்லாந்தில் தொற்றியல் நிலைமை மேம்பட்டு வருகிறது - வர்ஜினி மஸ்ஸெரி (FOPH)
சுவிற்சர்லாந்தில் தொற்றியல் நிலைமை மேம்பட்டு வருகிறது. ஆனால் குளிர்காலத்தினை நோயற்ற முறையில் எதிர்கொள்வதற்கு வேண்டிய தடுப்பூசி விகிதம் இன்னும் குறைவாக உள்ளது.
இத்தாலியில் இன்று முதல் 30 வீதம் அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் !
இத்தாலியில் இன்று அக்டோபர் 1 ந் திகதி வெள்ளிக்கிழமை முதல் , மின்சார கட்டணம் சுமார் 30 சதவீதம் உயர்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஒரு செய்திக்குறிப்பில் இத்தாலியின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமான ஆரேரா இதனை உறுதிப்படுத்தியது.
இத்தாலியில் அக்டோபர் 15 முதல் அனைத்து பணியிடங்களிலும் "கிறீன்பாஸ்" தேவை !
இத்தாலியில் அக்டோபர் 15 முதல், பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களும், தடுப்பூசி, அல்லது நொயால் மீட்கப்பட்ட நாட்டின் சுகாதார சான்றிதழை அல்லது சமீபத்திய எதிர்மறை கொரோனா வைரஸ் சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.