"நாங்கள் இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை," என்று சுகாதார இயக்குநர்கள் மாநாட்டின் (சிடிஎஸ்) தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்கு முன் காத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெடரல் கவுன்சிலர் அலைன் பெர்செட்டால் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட செய்திகள்தொடர்பில் சுவிஸ் உள்ளூர் ஊடகமொன்றிற்கு இன்று ஞாயிறு அவர் அளித்த செவ்வியில், ஃபெடரல் கவுன்சில் எதிர்பார்ப்புகளை ஊட்டுகிறது, என்று கூறினார். "ஓமிக்ரான் அலை அதன் உச்சத்தை அடையும் வரை நாங்கள் விதிகளைத் தளர்த்துவதற்குக் காத்திருக்க வேண்டும்." எனவும் குறிப்பிடடார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், " இங்கிலாந்து மற்றும் டென்மார்க்கை முன்மாதிரியாக சுவிற்சர்லாந்து பின்பற்றக்கூடாது. நாங்கள் இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை. பல மாநிலங்களிலும், மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் ஆக்கிரமிப்பு நிலையாக உள்ளது, அதே சமயம் கடந்த வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது. தொற்றுநோய் நண்பகலில் போர்நிறுத்தத்துடன் முடிவடைந்தது என அறிவிக்கும் ஒரு போராக முடிவடையாது. இது ஓய்வெடுக்கிறது, ஆனால் புதிய பிறழ்வுகள் நிலைமையை மீண்டும் மோசமாக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளியன்று, பெடரல் கவுன்சிலர் அலைன் பெர்செட் பிப்ரவரி 2 ம் திகதி முதல் தனிமைப்படுத்தல் மற்றும் தொலைத்தொடர்பு கடமைகளை நீக்குவதற்கான வாய்ப்பை சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments powered by CComment