சுவிற்சர்லாந்து கடந்த ஏழு நாட்களில் அதிக புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் உள்ள உலகின் ஐந்தாவது நாடாக தற்போதுள்ளது. சுவிஸ் ஊடகங்களால் சேகரிக்கப்பட்ட எவர் வேர்ல்ட் இன் டேட்டா புள்ளிவிவரங்களின்படி, இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தில், 100,000 மக்களில் ஏழு நாள் நிகழ்வுகள் டிசம்பர் 14 அன்று 746.2 ஆக இருந்தது. இது ஸ்லோவாக்கியா (944/100,000), டென்மார்க் (853,3), செக் குடியரசு (817,5) மற்றும் பெல்ஜியம் (769,7) ஆகியவற்றைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் சுவிற்சர்லாந்தை வைத்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் அண்டை நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்தத் தரவுகளின் படி ஒப்பிடுகையில், அரைபங்கு அல்லது அதற்கும் குறைவான தொற்றுகளே உள்ளன எனவும் தெரிவிக்கப்டுகிறது.
சுவிஸ்அவசர சிகிச்சைப் பிரிவுகளில் தடுப்பூசி போடப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஜெனிவா பல்கலைக்கழக மருத்துவமனைகளின் (HUG) தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மூன்று வாரங்களில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
HUG இன் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவர் ஜெரோம் புகின் கருத்துப்படி, தற்போது 31 முதல் 72 வயது வரையிலான கொரோனா வைரஸ் நோயாளிகளால் படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
Comments powered by CComment