சுவிற்சர்லாந்தில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறிச்து வெள்ளிக்கிழமை அரசு அறிவிக்கும் என மத்திய கூட்டாட்சி அரசு திங்களன்று அறிவித்தது.
சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் திங்களன்று, நாட்டின் கடுமையான தொற்றுநோய் நடவடிக்கைகளை அறிவிக்க அரசாங்கம் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கின்றது என்றார்.
டிசம்பர் 10 ஆம் தேதி, சுழல் தொற்று விகிதங்கள் மற்றும் மருத்துவமனையின் திறன் குறைந்து வருவதைக் கட்டுப்படுத்த இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலிப்பதாக அறிவித்திருந்தது. எந்த நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து மத்திய அரசு தற்போது மாநிலங்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இக் கலந்தாய்வு முதலில் செவ்வாய்கிழமை வரை நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது இது வெள்ளிக்கிழமை வரை நீடிக்கலாம் என தெரியவருகிறது.
Comments powered by CComment