counter create hit சுவிற்சர்லாந்து மருத்துவமனைகள் குளிர்காலத்தில் 30,000 கொரோனா நோயாளிகளை அனுமதிக்க வேண்டியிருக்கும் !

சுவிற்சர்லாந்து மருத்துவமனைகள் குளிர்காலத்தில் 30,000 கொரோனா நோயாளிகளை அனுமதிக்க வேண்டியிருக்கும் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில், சென்றவாரம் நடைபெற்ற முக்கிய தடுப்பூசி பிரச்சாரம் வெற்றியடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 8ம் திகதி முதல் 14 ம் திகதி வரை இடம்பெற்ற தடுப்பூசி வாரத்தில், முதல் டோஸ் பெறும் நபர்களின் எண்ணிக்கையில் புள்ளிவிவரங்கள் சிறிதளவு உயர்வைக் காட்டுகின்றன என்று ஆரம்ப தரவு சுட்டிக்காட்டுகிறது.

தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரத்தின் நோக்கம் அடையப்பட்டுள்ளது என்று, மாநிலங்களின் மருத்துவர்கள் மாநாட்டின் தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர் தெரிவித்துள்ளார். " ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசிகளின் விகிதத்தில் வியத்தகு அதிகரிப்பு இல்லை என்றாலும், இது வரும் வாரங்களில் தடுப்பூசி எண்களில் மாற்றத்தைக் காண்பிக்கும்" என்று அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜேர்மனியில் வைரஸின் நான்காவது அலை - மீண்டும் வீட்டிலிருந்து வேலைத் திட்டம் !

ஃபெடரல் ஆபிஸ் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (FOPH) இன் சமீபத்திய புள்ளிவிவரப்படி, சுவிட்சர்லாந்தில் 64.7 பெரியவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. புள்ளிவிவரங்களில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சேர்க்கப்படும்போது இந்த எண்ணிக்கை 73.62 சதவீதமாக உயர்கிறது.

இதேவேளை இன்று முதல் சுவிற்சர்லாந்து அதிகாரப்பூர்வமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், உடல்நலப் பிரச்சனைகளால் "ஆபத்தில்" இருப்பதாகக் கருதப்படுபவர்களுக்கும் தடுப்பூசிகளின் 3வது டோஸை வழங்கத் தொடங்குகிறது. இது ஏற்கனவே சில மாநிலங்கள் கடந்த வாரமே தொடங்கிவிட்டன.

இது இவ்வாறிருக்க, " நமக்கு முன்னால் வரும் குளிர்காலம் கடினமானதாகவும், தொற்றுக்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பின்படி, மருத்துவமனைகள் சுமார் 30,000 கொரோனா நோயாளிகளை அனுமதிக்க வேண்டியிருக்கும் " என்று எச்சரிக்கையினை சுவிஸ் சுகாதார நிபுணரும், கோவிட்-19 பணிக்குழுவின் தலைவருமான தஞ்சா ஸ்டாட்லர், விடுத்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் வரும் வாரங்களில் தொற்றுநோயியல் நிலைமையின் பரிணாம வளர்ச்சி காரணமாக, பெடரல் கவுன்சில் வரும் வாரங்களில் புதிய நடவடிக்கைகளை தீவிரமாக பரிசீலிப்பது தவிர்க்க முடியாதிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.