இத்தாலியில் இன்று அக்டோபர் 1 ந் திகதி வெள்ளிக்கிழமை முதல் , மின்சார கட்டணம் சுமார் 30 சதவீதம் உயர்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஒரு செய்திக்குறிப்பில் இத்தாலியின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமான ஆரேரா இதனை உறுதிப்படுத்தியது.
இந்த அறிவித்தலின்படி, மின் கட்டணங்கள் வழக்கமான குடும்பத்திற்கு 29.8% ஆகவும், எரிவாயு கட்டணங்கள் 14.4% மாகவும் உயரும் எனத் தெரிய வருகிறது.
ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலும் ஆற்றல் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த அதிகரிப்பு வருவதாகவும், இந்த விலை உயர்வினை இத்தாலிய அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை என்றால், புதிய விலை உயர்வு, நுகர்வோருக்கு 45 சதவிகிதத்தை எட்டியிருக்கும், எனவும் அரேரா தெரிவித்துள்ளது.
நுகர்வோருக்கான எரிசக்தி விலைகள் திடீர் உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலிய அரசாங்கம் மூன்று பில்லியன் யூரோக்கள் செலவழிக்கும் நடவடிக்கைகளை கடந்த வாரம் அறிவித்தது. இதன் மூலம் பெரும்பாலான குடும்பங்களுக்கான செலவை 30 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதத்திற்கும் குறைவாக வைத்திருப்பதோடு, 8,265 யூரோக்களுக்கு கீழ் வருமானம் கொண்ட குடும்பங்கள், குறைந்தது 4 சார்ந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் உட்பட குறைந்த நல்வாழ்வு உள்ளவர்களுக்கு கூடுதல் செலவுகளை பூஜ்ஜியமாக வைத்திருக்கவும் அரசு உதவுகிறது. 20,000 யூரோக்களுக்கும் குறைவான வருமானம், மாநில ஓய்வூதியம் அல்லது வேலையின்மை சலுகையைப் பெறுபவர்கள் மற்றும் கடுமையாக நோய்வாய்ப்பட்ட மக்களும் சலுகைகளைப் பெறுவார்கள்
இந்த நடவடிக்கைகள் 2021 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டு முழுவதும் அனைவருக்கான எரிவாயு பில்களிலிருந்தும், குடும்பங்கள் மற்றும் சில சிறு வணிகங்களுக்கான மின்சாரத்திற்கான 'பொது கட்டணத்தையும்' குறைத்துள்ளன.
இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி கடந்த வாரம் பேசுகையில், எரிசக்தி விலை உயர்வுக்கான பல காரணங்கள் தற்காலிகமானவை ஆனால் ஐரோப்பிய அளவில் ஏற்பட்டிருக்கும் விநியோகச் சிக்கல்கள் போன்றவற்றிற்கான நீண்ட கால நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த விலை உயர்வு பல்வேறு வணிகத்திலும் தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
Comments powered by CComment