counter create hit இத்தாலியில் கோவிட் -19 தளர்வுகள் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் ?

இத்தாலியில் கோவிட் -19 தளர்வுகள் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் ?

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இத்தாலியில் கொரோனா வைரஸ் வழக்குகள் மீண்டும் உயரத் தொடங்கும் போது, ​​சுகாதார நடவடிக்கைகள் மீண்டும் செயல்படுத்தப்படும் ஒரு காலப்பகுதியாகவே சமகாலம் தெரிகிறது.

பல பிராந்தியங்கள் சமீபத்தில் தொற்று வீதத்தில் கூர்மையான அதிகரிப்புகளைப் பதிவுசெய்த பின்னர், சுகாதாரக் கட்டுப்பாடுகள், வணிகங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் பெரிய நிகழ்வுகளைத் தடைசெய்தல் உள்ளிட்டவை, இத்தாலியில் மீண்டும் வரக்கூடும் என்பதில் பரவலான கவலை உள்ளது.

ஜூன் மாத இறுதியில் இருந்து, இத்தாலியின் ஒவ்வொரு பிராந்தியமும் குறைந்த ஆபத்துள்ள ‘வெள்ளை’ மண்டலத்தில் உள்ளது . இந்நிலையில் பல பகுதிகளில் அண்மையில் அதிகரித்த தொற்றுக்களின் செங்குத்தான பாதை தற்போதைய விதிகளின் கீழ், சில பிராந்தியங்களில் ‘மஞ்சள்’ அல்லது ‘ஆரஞ்சு’ மண்டல விதிகள் சில வாரங்களுக்குள் மறுசீரமைக்கப்படலாம் என எதிர்பார்க்கக்கடுகிறது.

வைரஸ் மாறுபாடு Vs தடுப்பூசி - வெல்வது யார் ?

இத்தாலியின் உயர் சுகாதார நிறுவனம் (ஐ.எஸ்.எஸ்) மற்றும் இத்தாலிய சுகாதார அமைச்சகம் என்பன வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள மிகச் சமீபத்திய வாராந்திர சுகாதார தரவு அறிக்கையின் அடிப்படையில், வரும் வாரங்களில் சார்டினியா, சிசிலி, வெனெட்டோவின் பகுதிகள்,காம்பானியா மற்றும் லாசியோ ஆகியவை ‘மஞ்சள்’ மாறும் அபாயம் அதிகம் என்று கருதப்படுகிறது.

தற்போது, ​​ஏழு நாட்கள் தொடர்ச்சியாக ஒட்டுமொத்த இத்தாலியின் சராசரி நாடு தழுவிய தொற்று நிகழ்வு விகிதம் 100,000 மக்களுக்கு 19 தொற்றுக்கள் என ஐஎஸ்எஸ் தரவு காட்டுகிறது. இதில் பிராந்தியங்களுக்கு இடையில் குறிப்பிடத்தக்க மாறுபாடு உள்ளது. சார்டினியா மற்றும் சிசிலி ஆகியவை நாட்டில் முறையே 33.2 மற்றும் 31.8 ஆக உள்ளன. அவற்றைத் தொடர்ந்து வெனெட்டோ (26.7), லாசியோ (24), காம்பானியா (21.7) எனும் நிலையில் உள்ளது.

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம்; உரையாடல்களைத் திரட்ட நீதிமன்றம் பணிப்பு!

தொற்றுக்கள் அதிகரித்த போதிலும், இப்போதைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் தாக்கம் மிகக் குறைவாகவே உள்ளது என ஐ.எஸ்.எஸ் தலைவர் சில்வியோ புருசாஃபெரோ வெள்ளிக்கிழமை கூறினார்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டுப்பாடுகள் மீண்டும் வந்தால் பொருளாதார பாதிப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில் செயல்படுமாறு பிராந்தியத் தலைவர்கள் சுகாதார அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர். சர்வதேச சுற்றுலா வருகையாளர்களும் உள்நாட்டு விடுமுறை முன்பதிவுகளும் நிறைந்த இத்தாலியின் பரபரப்பான மாதம் இது.

சுவிற்சர்லாந்தில் வரும் வெள்ளி முதல் இடி, புயல், மழை அதிகரிக்கும் ?

இது தொடர்பில் திங்களன்று விவாதங்களைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதன் மாற்றங்கள் குறித்த விவரங்களை வெளியிடும் புதிய ஆணையை அரசாங்க அமைச்சர்கள் இறுதி செய்வார்கள் என்றும், இந்த வாரத்தின் நடுப்பகுதியில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula