சுமார் 396 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனின் ஆளுகையின் கீழ் இருந்த கரீபியன் தீவு நாடான பார்படோஸ் திங்கட்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கையளிப்பு வைபவத்தின் பின்னர் உலகின் புதிய குடியரசு நாடாக மலர்ந்துள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு! : 3 பேர் பலி
புதன்கிழமை அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் 15 வயது மாணவர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப் பட்டும், 8 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடை மோசமான நடவடிக்கை! : WHO
உலகை சமீப காலமாக அச்சுறுத்தி வரும் கோவிட் இன் புதிய வீரியம்மிக்க திரிபான ஒமிக்ரோன், தென்னாப்பிரிக்காவில் முதலில் இனம் காணப் பட்ட காரணத்தினால் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு முழுமையான விமானப் போக்குவரத்துத் தடைகளை உலக நாடுகள் விதிப்பது அபத்தமானது என உலக சுகாதாரத் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை கவலை தெரிவித்துள்ளது.
பெப்ரவரியில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நியூசிலாந்து!
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மக்களில் கோவிட்-19 தடுப்பூசி முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் 2022 ஜனவரி 16 ஆம் திகதி முதல் நியூசிலாந்துக்கு வர முடியும் என்று நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இன்கா நாகரிகத்துக்கு முந்தைய பழமையான மம்மி கண்டுபிடிப்பு!
பெரு தலைநகர் லிமாவின் கிழக்கே கஹமர்கீலா என்ற இடத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்று அகழ்வாராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
உலகை மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்டின் மிக வீரியமான ஒமிக்ரோன் திரிபு!
தென்னாப்பிரிக்காவில் அறியப் பட்டு மிக வேகமாகப் பரவி வரும் கோவிட் வைரஸின் நவீன மிக ஆபத்தான திரிபான ஒமிக்ரோன் இன் பரவல் சில ஐரோப்பிய நாடுகளில் அறியப் பட்டதை அடுத்து, தடுப்பூசிகள் பெரும்பான்மையாகப் போடப் பட்ட நாடுகளாக இருந்தாலும், பல ஐரோப்பிய நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரப் படுத்தத் தொடங்கியுள்ளன.
ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற படகு விபத்து! : 31 பேர் பலி
புதன்கிழமை ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற படகு ஒன்று விபத்தில் சிக்கியதில், பிரிட்டனை நோக்கிப் பயணித்த குறைந்தது 31 பயணிகள் பலியாகி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.