தமிழகத்தில் கடுமையாகத் தாக்கம் செலுத்திய கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில், 50 சதவீத பேருந்துகளை இயக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டெழும் டெல்லி : இன்றுமுதல் புதிய ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தலைநகரான டெல்லி ஊரடங்கு கட்டுப்பாடுகளால் முடங்கிப்போனது. தற்போது பாதிப்பு குறைந்துவரும் நிலையில் அங்கு இன்று முதல் சில கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய தேவைகளை மக்கள் வெளியே நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகிவருகிறது.
டெல்லி துணிக்கடையில் பயங்கர தீ விபத்து
டெல்லி கடைவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அது அடுத்தடுத்த கடைகளைக்கும் பரவியதால் பதற்றம் நிலவியது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு 21ஆம் திகதிவரை நீட்டிப்பு
கொரோனா தொற்றின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகிறது.
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை : மும்பைக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை
மும்பை மாநகரத்திற்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் : எதிர்பார்க்கப்படும் விடயங்கள்
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு உட்பட ஜிஎஸ்டியின் பல கட்டமைப்பு சிக்கல்கள் இன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன, ஆனால் அரை நாள் கூட்டமாக நிகழும் இதில் போதுமான முடிவுகள் எடுக்கப்படுமா என்பன தெளிவாக இல்லை.
இலட்சதீவு விவகாரம் - இயக்குனர் மீது தேசத்துரோக வழக்கு !
இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான் இலட்சத்தீவுகளின் நிர்வாக தலைவரான ப்ரபுல் ஹடா படேல் தலைமையிலான நிர்வாகம் குறித்து பலமான எதிர்ப்புக்கள் கேரளத்தில் எழுந்துள்ளன.