சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த நாங்கள் எப்போதும் தயார்: இந்திய தலைமை தேர்தல் அதிகாரி
ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தலைவர் ராஜிவ் குமார் இன்று மத்திய பிரதேசம் சென்றுள்ளார்.
மத்திய பிரதேசம் சென்றுள்ள அவர் தேர்தல் குறித்து கூறுகையில் ''அரசியலமைப்பு வழங்கியுள்ள விதிகளின்படி நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்.
இதுதான் எங்களது பணி. பாராளுமன்ற பதவிக்காலம் ஐந்தாண்டு. நாங்கள் ஆறு மாதத்திற்கு முன் தேர்தலை அறிவிக்க முடியும்.
அதேபோன்றுதான் சட்டமன்ற தேர்தலுக்கும். சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்'' என்றார்.
Comments powered by CComment