2022ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 5ஆம்
திகதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இம்முறை புனித ஜார்ஜ் கோட்டையில் கூட்டத் தொடர் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டின் முதல் பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5ம் திகதி காலை 10 மணிக்குத் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
மேலும், கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறிய அவர், இதற்காக பேரவையில் தொடுதிரை கணினிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
Comments powered by CComment